கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். ஊழியர்கள் கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.