districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: சேதமடைந்த நெற்பயிர்கள் ஆய்வு

சிதம்பரம், நவ 5- சிதம்பரம் அருகே 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் நெற்பயிர் மற்றும் நாற்றங்கால் மழை நீர் மற்றும் கொள்ளிடம் ஆற்று தண்ணீ ரால் வீணாகியுள்ளது என வெள்ளிக் கிழமை (நவ. 4) தீக்கதிரில் செய்தி வெளியி டப்பட்டது. இதையடுத்து வேளாண் அலு வலர்கள் சம்பந்த இடத்தில் ஆய்வு மேற் கொண்டனர் சிதம்பரம் அருகே தெற்குபிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கீழத்திருக்கழிப்பாலை, மேலதிருக்கழிபாலை, கனகரப்பட்டு, கிள்ளை, கீழச்சாவடி உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் மற்றும் நடவுக்கு தேவையான நாற்றங்கால்கள் தற்போது பெய்து வரும் மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் வீணாகிப் போனது. இந்நிலையில் செய்தி குறித்து விபரம் அறிந்த வேளாண் உதவி இயக்குநர் நந்தினி, வேளாண் அலுவலர் தீபதர்ஷினி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர் தெற்கு பிச்சா வரம் உள்ளிட்ட அனைத்து பகுதி களுக்கும் சென்று சேதமடைந்த நெற்பயிர், நாற்றங்கால் குறித்து ஆய்வு மேற்கொண் டனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகளின் வாழ் வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.