கடலூர், ஏப். 17- கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட சாவடி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் சாலை யோரங்களில் வீசப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாலை யோரத்தில் வீசப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இந்த குப்பைகளால் கொசு உற்பத்தியாகி சாவடி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை யோரங்களில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசு வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும், அதிகாரி கள் இந்த பிளாஸ்டிக் குப்பை களை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.