சிதம்பரம், நவ. 28- சிதம்பரம் புறவழிச் சாலை 4 முனை சந்திப்பில் சுரங்க பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே புறவழிச் சாலை பகுதியில் அமைந்துள்ள பொய்யா பிள்ளை சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொய்யா பிள்ளை சாவடி 4 முனை சந்திப்பு அருகே சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு சுரங்கப் பாதை அமைத்து தர வலி யுறுத்தி திங்கட்கிழமை காலை அப்பகுதி பொதுமக்கள், மாண வர்கள் திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் காவல் துறையினர் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகளு டன் இதுகுறித்து பேசி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.