districts

img

மருமகள் மீது ஆசிட் வீச்சு விவகாரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச்.25- விருத்தாசலம் அருகே மரு மகள் மீது மாமியார் ஆண்டாள் ஆசிட் வீசிய சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்லியம்மன் கோவிலில் வசிக்கும் அதிமுக நகர துணை செயலாளர் ஆண்டாள் அவரின் மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததை மாதர் சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் மருத்துவ வசதியும், தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணமும் வழங்க வேண்டும். போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என நிர்வாகிகள் வலி யுறுத்தினர். இதில்  மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டத் தலைவர் பி.மல்லிகா, மாவட்ட துணைத் தலைவர் பி.தேன்மொழி, துணைச் செய லாளர்கள் கே.அன்பு, செல்வி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.சாந்தகுமாரி, விருத்தாசலம் வட்டத் தலைவர் ஆர்.சந்தன மேரி, செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர்.