சிதம்பரம், டிச.15- சிதம்பரம் நகரத்தையொட்டி செல்லும் பாலமான் வாய்க்கால் வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், நற்கந்தன்குடி, கொடிபள்ளம், கோவிலாம்பூண்டி, மீதிகுடி என 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் வக்கர மாரி ஏரியில் இருந்து முதலைகள் கரையேறி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வாய்க்கால், குளம், தாழ்வான நீர்நிலைகளில் தஞ்சமடைகிறது. அதேபோல், சிதம்பரம் பிரதான சாலை வழியாக செல்லும் பாலமான் வாய்க்காலிலும் முதலைகள் தஞ்சமடைகிறது. வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் குளிக்கவும், கை, கால்களை கழுவதற்கு வாய்க்காலுக்கு செல்லும் போது முதலை கடித்து பலர் இறந்துள்ளனர். சிலர் கால், கைகளை இழந்தும் உள்ள னர். இதனால் அச்சமடைந்து வரும் பொது மக்கள், வயல்வெளி மற்றும் வாய்க்கால்முதலைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், “முதலைகள் அதிகமாக ஊடுரு வும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளோம். துண்டு பிரசுரமும் வழங்கி வருகிறோம். பொதுமக்களும் விழிப்புணர்வு தேவை” என்றார்.