districts

img

கடலூர் பேருந்து நிலையத்தை மாற்ற சிபிஎம் கடும் எதிர்ப்பு

கடலூர், ஜூலை 21- எம்.புதூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நடை பெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் சிபிஎம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. கடலூர் பேருந்து நிலையத்தை எம்.புதூர் குறிஞ்சிப்பாடி தொகுதி யில் அமைப்பதற்காக மாநக ராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அனைத்துக் கட்சிகள், குடி யிருப்போர் நல சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் கோட்டாட் சியர் அதியமான் கவியரசு தலை மையில் நடைபெற்றது. இதில் மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநக ராட்சி ஆணையர் நவேந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் பேசுகை யில், “கடலூர் புதிய பேருந்து நிலை யம் எம்.புதூர் கிராமத்தில் அமைப்பதற்கு கடலூர் மாநக ராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். விழுப்புரம் - நாகப்பட்டினம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து பகுதி மக்களுக்கும் ஏற்ப தேசிய நெடுஞ்சாலை, பாதிரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்க வேண்டும். தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடத்தில் நகரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டு மையமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன், சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட  ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.