districts

img

மாதர் சங்கத்தினரை அச்சுறுத்திய கடலூர் காவல் துறை: சிபிஎம் கண்டனம்

கடலூர், நவ. 24- போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் காவல் துறை யினர் மாதர் சங்கத்தினர் வீடு களுக்கு சென்று அச்சுறுத்திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சென்னை டிஜிபி அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இரவு கடலூர் மாவட்டம் முழுவதும் மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வீடு களுக்கு சென்று காவல்துறை அதிகாரிகள் பெண்களை மிரட்டி உள்ளனர். சென்னைக்கு வாகனத்தில் சென்றவர்களை தடுத்துள்ளனர். சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆவிணங்குடி பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களை திரும்பி அனுப்பி யுள்ளனர். நெய்வேலியில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மாதவி வீட்டுக்கும், கடலூர் வண்ணி யார் பாளையத்தில் நகரச் செய லாளர் சாந்தகுமாரி விட்டுக்கும் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர் ஜனநாயக முறையில் பேராடும் இயக்கங்களின் குரலை ஒடுக்கும் வகையில் பெண்க ளின் விடுகளுக்கு சென்று காவல்துறை அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட அத்துமீறல் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.