districts

img

வீராணம் ஏரி பகுதியில் நிலக்கரி ஆய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

சிதம்பரம், ஜன. 7- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதி களில் ஒன்றிய அரசின் நிலக்கரித் துறை யின் அனுமதியோடு தனியார் நிறுவனம் நிலக்கரி குறித்து ஆய்வு செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை கடந்த ஒரு மாதங்க ளாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த ஆலோ சனைக் கூட்டம் ஆட்சியர் சுவேதா சுமன் தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிலக்கரி ஆய்வில் ஈடுபடும் நிறு வனத்தின் அதிகாரிகள், சிதம்பரம்,  காட்டு மன்னார்கோவில் பகுதியில் உள்ள விவ சாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீராணம் பகுதியில் நிலக்கரி ஆய்வு செய்யும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பணியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அனைவரும் தெரிவித்தனர். இதையடுத்து உதவி ஆட்சியர் இந்த திட்டம் குறித்து விவசாயிகள் கூறிய கருத்தை அரசுக்கு அறிக்கையாக அனுப்புவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.