districts

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை

  கடலூர், மே 21- கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் 7648 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு:- 2021-2022ஆம் நிதியாண்டில், 825 மாணவர்களுக்கு ரூ.30. லட்சத்து 84 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், 93 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் இயங்கும் 29 தொண்டு நிறுவனங்களுக்கு உணகூட்டு மானியம் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யமாக ரூ.2 கோடி 52 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 590 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடி 10 லட்சம் 90 ஆயிரம் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளது. மேலும் திருமண உதவித்தொகையாக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு 7 லட்சம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு 14 இலட்சம் வங்கி கடன் மானியமாக 61 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.