கடலூர்,மார்ச்10- கடலூர் பேருந்து நிலையத்தை எம். புதூருக்கு மாற்றுவதைக் கண்டித்து அனைத்து கட்சி, பொது நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தை எம். புதூருக்கு மாற்றும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், கொண்டங்கி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பாப்புலியூர் ரயில் நிலை யத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் குளோப், நகரச் செயலாளர் நாகராஜ், குடியிருப்போர் சங்க உதவி பொதுச் செயலாளர் தேவநாதன், ரங்கநாதன், ரமணி, சண்முகம், கண்ணபிரான், காங்கிரஸ் மீனவர் பிரிவு தலைவர் கடல் கார்த்திகேயன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, ரவி, பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் ரவி, தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் குருராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன், சிபிஎம் மாநகர குழு உறுப்பினர்கள் திருமுருகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.