கடலூர், டிச.20 - சாகித்ய அகாடமியின் சிறார் இலக்கிய (பால சாகித்ய) விருதாளர் ஆயிஷா இரா.நடராசன் எழுதிய 150-வது நூலை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டு வாசிப்பே வெல்லும் என்னும் தலைப் பில் சிறப்புரையாற்றினார்.
அப்போது, “அறிஞர்கள் பலரும் வாசிப்பு காரணமாக உருவானவர்கள் தான். அண்ணாதுரை, அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், நேரு போன்ற தலைவர்கள் பலரும் புத்தகங்களை எழுதி யுள்ளனர். வாசிப்பு காரண மாகத்தான் திருவள்ளுவர் திருக்குறளையும், இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத் த்தையும் எழுதினர். இன்றைய காலக் கட்டத்தில் வாசிப்பு நிகழ்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.
நூல் ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் இதுவரை யில் கருப்பு யுத்தம், ஆயிஷா, ஒரு தோழியின் கதை, பாலித்தீன் பைகள், வகுப்பறை கூண்டை விட்டு வான்வெளியை நோக்கி, வரலாறு மறந்த விஞ்ஞானி கள், வாங்க அறிவியல் பேசலாம் உள்ளிட்ட 149 நூல் களை எழுதி வெளியிட்டுள் ளார்.
150 ஆவது நூல் வெளி யீட்டு விழா கடலூரில் நடை பெற்றது. ஆயிஷா. இரா. நடராசனின் ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி, கழுதை வண்டி, (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சிறார் நூலான பண்ணை யுத்தம், மற்றும் நூலகலாஜி, (கட்டுரை) ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டார்.
கவிஞர் பால்கி மற்றும் கவிஞர் ஜோ.கௌதமன் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நூல்களின் முதல் பிரதி களை சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் பேரா. பூபதி பெரியசாமி பெற்றுக்கொண்டார்.
புதுதில்லி விக்யான் பிரச்சார் அமைப்பு சுட்டி. கணேசன், கடலூர் இந்திய மருத்துவ கழகத்தின் தலை வர் டாக்டர் ஆர்.கண்ணன், குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் இளந்திரையன், நூலக வாசகர் வட்ட தலைவர் தணிக்கையாளர் குமரகுரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூல் வெளியீட்டு நிகழ்ச் சிக்கு கடலூர் கிருஷ்ணசாமி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.கி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஷ மாலா நடராஜன் வரவேற் றார். விழாவில் மாநில வரி அலுவலர் ஜனார்த்தனன் கலந்து கொண்டார். நூலா சிரியரை ஐஸ்வர்யா அறிமுகம் செய்து வைத்து பேசினார். புத்தக வெளி யீட்டு விழாவில் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பக மேலா ளர் நாகராஜன் நன்றி கூறி னார்.