சிதம்பரம், மார்ச் 7- புனகிரி அருகே சாத்தப்பாடி கிராம தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்ற வாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த மோதலில் ஈடுபட்ட வர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சாத்தப் பாடி கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் மாசி மகம் திரு விழாவையொட்டி திங்க ளன்று(மார்ச் 6) இரவு 7 மணிக்கு நான்கு சக்கர வாகனத்தில் மணக் குடி கிராமம் வழியாக ஊர்வலமாக கிள்ளை கடற் கரைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒலிப்பெருக்கி யில் ‘கண்டா வரச் சொல்லுங்க’என்ற திரைப்பட பாடல் ஒலித்தும் தாரைதப்படையும் அடித்துள்ளனர். இதைபார்த்ததும் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தலித் சமூக இளைஞர்களை வழிமறித்து ஒலிப்பெருக்கியை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் அதிகரித்து கடுமை யாக ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த வடக்கு திட்டை,தெற்கு திட்டை, மேலமணக்குடி, மணவெளி உள்ளிட்ட பகுதியில் இருந்து மாற்று சமூக இளைஞர்கள் மேல மணக்குடியில் ஒன்று திரண்டு தலித் சமூக இளை ஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞர்கள் படுகாய மடைந்தனர். தலை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் கொட்டியதால், மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களில் சிலரே தங்களது இருசக்கர வாகனத்திலேயே ஏற்றிச் சென்று புவனகிரி அரசு மருத்துவமனை வாசலில் விட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த சாத்தபாடி தலித் மக்கள் இச்சம்பவத்தில் தொடர்புடைய மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த தகவல் நள்ளிரவு நேரத்திலும் காட்டு தீயாக பரவியதால், மாற்றுச் சமூக இளைஞர்கள் மீண்டும் ஒன்று திரண்டுள்ளனர். இதற்கிடையே, தாக்கு தல் சம்பவத்தில் படுகாய மடைந்த சாத்தப்பாடி கிராம தலித் இளைஞர் சுரேந்தர் (16) புனகிரியிலிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார். அந்த வாகனத்தை வழிமறுத்த மாற்று சமூகத்தை சேர்ந்த வர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தலித் இளைஞர் சுரேந்தர் அவரது தந்தை சுதாகர், அம்மா செல்வமணி ஆகி யோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரம்-குறிஞ்சிபாடி சாலையில் தலித் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த தகவலை அறிந்த சம்பவடத்திற்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி தலைமையிலான காவலர்கள் தலித் மக்களிடம் பேச்சு நடத்தி னர். இதனையடுத்து, போராட்டத்தை விலக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் தலித் இளைஞர்கள் ரகுநாத், நித்திஷ், அன்பு செழியன், நவீன், சாரங்கபாணி, சுரேந்தர் அவரது தந்தை சுகுமார், அவரது அம்மா செல்வமணி, மாற்று சமூ கத்தை சேர்ந்த அஜித் ஆகியோர் காயமடைந்த னர். புனவகிரி அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இந்நிலையில், மருத்துவ மனைக்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாநிலச் செயலாளர் வாஞ்சி நாதன், மாவட்டத் தலைவர் ராஜேஸ்கண்ணன் தலித் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், “இந்த மோதலில் சம்பந்தமே இல்லாத இரு நபர்களும் காய மடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் பாதிக்கப் பட்டட தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பும், சட்டப்படியான நிவாரணம் வழங்க வேண்டும். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சமூக பதற்றத்தை உரு வாக்குபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.