districts

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எதிரொலி கடலூர் மாநகராட்சியில் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு

கடலூர், மார்ச் 17- கடலூரில் வீடுகள், வணிக வளா கங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டு வதற்கு அனுமதி அளிக்க மாநகராட்சி அலு வலர்கள், பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறாமல் தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.  அதன் அடிப்படையில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவ நாதன் தலைமையிலான காவலர்கள், மாநக ராட்சி அலுவலகம் மற்றும் புதுப்பாளை யம், பாரதி சாலையில் உள்ள 4 கட்டு மான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 4 கட்டு மான நிறுவனங்களிலிருந்தும் முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த லஞ்சத் தொகை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கீதா, லஞ்ச ஒழிப்பு காவல்துறை யிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் சாரதாம்பாள், ஆறுமுகம், முருகமணி மற்றும் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.