districts

img

மக்களின் மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலி

சிதம்பரம், ஜூலை 4- மக்களின் மருத்துவரான சிதம்பரம் அசோகனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிதம்பரத்தை சேர்ந்த மருத்துவர் அசோகன்(73) கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்து வம் பார்த்து வந்தார்.  இவரைப் பொது மக்கள் ஆரம்ப காலத்தில் 5 ரூபாய் மருத்துவர் என்றே அழைப்பார்கள். தற்போது வரைக்கும் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிக மாக இருந்த அந்த காலக் கட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் பலதும் மூடிய நிலையிலும் இவர் மட்டும் மருத்துவமனையை மூடாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரின் சேவைக்கு பல்வேறு அமைப்புகளும் பாராட்டு தெரி வித்தன. தற்போது வரைக்கும் மருத்துவம் பார்த்து வரும் எஸ்.பி.கோயில் தெரு விலுள்ள மருத்துவமனைக்குச் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட ஏழைகள் வந்து செல்வார் கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்து வம் பார்த்து வந்தாலும் மருத்துவ மனைக்குச் சொந்த கட்டிடம் இல்லை. இறுதிவரைக்கும் வாடகை வீட்டி லேயே குடியிருந்து மருத்துவம் பார்த்து வந்தார். இவருக்கென எந்தச் சொத்தும் இல்லை. திடீரென உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனைக்குத் வந்தவர் கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறினாலும் கட்டாயப்படுத்த மாட்டார்.

ஊருக்குப் போகக் காசு இருக்கா? எனக் கேட்டுப் பேருந்து செலவுக்கும் பணமும் கொடுத்து அனுப்பி வைப்பார்.  மிகவும் எளிமையாகவும் சேவை மனதுடனும் மருத்துவம் பார்த்து வந்த இவர், தனது மருத்துவமனையின் ஓரத்தில் செல்லபிராணியான நாய்களை வளர்த்து வந்தார். சில நேரங்களில் மன அமைதிக்கு அதனு டன் நேரத்தைக் கழிப்பார். சிதம் பரத்தில் ஏழை மக்கள் அதிகம் நாடி செல்லும் மருத்துவரான இவர் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை(ஜூன் 3) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியானது. மக்கள் மருத்துவர் அசோகனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் அவரது மருத்துவமனையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்னாரது சொந்த ஊரான தையாக்குப்பம் வரை இந்த இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் மக்கள் கலந்து கொண்டனர். பிறகு, அங்குள்ள சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது கண்கள் புதுச்சேரி அரவிந் கண் மருத்துவ மனைக்குத் தானமாக வழங்கப் பட்டது. மருத்துவர் அசோகனுக்கு குமாரி(66) என்கிற மனைவியும், திருமணமாகாத இரண்டு மகன்களும் உள்ளனர். இருக்கும்போதும் இறந்தபிறகும் சேவை செய்த மருத்துவரின்  மறைவு அனைத்து தரப்பு மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.