சிதம்பரம், ஏப்.11- சிதம்பரம் நகராட்சி அலுவல கத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் திங்களன்று (ஏப். 10) நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக் குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்மன்ற உறுப்பினர் கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மக்கீன், மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 32 வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகளை பேசினர். அதனைதொடந்து நகர் மன்ற தலைவர் பேசுகையில், சிதம்பரம் பகுதி யில் ரூ214 கோடிக்கு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உறுப்பினர்களின் கோரிக்கை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் நகர்மன்ற கூட்டத்தில் சுயேட்சையாக நின்று திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற 13ஆவது வார்டு உறுப்பினர் ரமேஷ் பேசி முடித்த வுடன் நகர்மன்ற துணைத் தலைவர் பேச முயற்சித்தார். அப்போது நகர் மன்ற தலைவர் மணி அடித்து கூட்டத்தை முடித்து விட்டார். இதற்கு நகர் மன்ற துணைத் தலைவர் எதுவும் பேசாமல் அடுத்த கூட்டத்தில் பேசிக் கொள்ள லாம் என நினைத்து மன்றத்தை விட்டு வெளியேற ஆயத்தமானார். அப்போது வார்டு உறுப்பினர் ரமேஷ் நகர்மன்ற துணைத் தலைவர் இருக்கையின் அருகே வந்து நான் மூத்த நகர் மன்ற உறுப்பினர். நான் பேசிய பிறகு நீ பேசி என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்தால் நீ அசிங்கப்படுவாய். மல்லாந்து படுத்து எச்சியை துப்பிக் கொள்ளாதே. மன்றத்தில் நான் தான் நிறைவுரை யாற்றுவேன் என கூறியுள்ளார். அதற்கு நகர்மன்ற துணைத் தலைவர் நான் எப்போது பேச வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? வார்டு உறுப்பினர்கள் சில தகவல் களை விட்டிருப்பார்கள் அதனை ஒருங்கினைத்து நான் தான் நிறை வுரையற்றுவேன் எனக் கூறியுள்ளார். அபோது ரமேஷ் நகர் மன்ற துணைத் தலைவரை உறுப்பினர்கள் மத்தியில் ஒருமையில் ஆபாசமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மற்ற திமுக உறுப்பினர்கள் தடுத்த போதும் ரமேஷ் தொடர்ந்து மிரட்டும் தோனியில் ஓறுமையில் பேசினார். அங்கிருந்த சக நகர்மன்ற உறுப்பினர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்று அனுப்பி னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூறு கையில், மன்றத்தின் மூத்த உறுப்பினர் இதுபோல் நடந்து கொள்வதை ஏற்க முடியாது. இவருக்கு எதாவது பேச வேண்டும் என்றால் நகர் மன்ற தலைவரைத் தான் கேட்க வேண்டும். எனவே அவர் வருகின்ற மன்றக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.