கடலூர், அக். 23- தமிழகம் முழுவதும் திங்களன்று (அக்.24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை, சஷ்டி தொடங்குவதால் சென்னை, கோயம்பேடு, கன்னியா குமரி தோவாளை, கடலூர் பூ மார்க்கெட்டிலும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் திரண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனர். விழாக்காலங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட்டன. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.