சிதம்பரம், பிப்.16- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை யில் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லட்சுமணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவராக லட்சுமணன், செயலாளராக சந்தான ராஜ், பொருளாளராக பழனி தேர்வு செய்யப்பட்டன. ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலில் அழிந்து வரும் மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.