districts

img

சேறும் சகதியுமாக மாறிய பேருந்து பணிமனை

திட்டக்குடி, அக். 31- கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இள மங்கலத்தில் அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பேருந்துகள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பேருந்துகள் அங்குள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனையை சீரமைக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 25 ஆண்டு களுக்கு மேலாக இந்த அவல நிலை நீடிக்கிறது. பள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் ஓட்டுநர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்ப தாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பணி மனையில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும், பணிமனையின் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து விஷ ஜந்துகள் உள்ளே வருவதால், ஓய்வறையை உயர்த்தி அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.