கடலூர்,மார்ச்.1- கடலூர் ஆட்சியர் அலு வலகத்தில் 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பர பரப்பு ஏற்பட்டது. கடலூர், வண்டிப் பாளையம் குழந்தை காலனியை சேர்ந்த தேவ நாதன் ,வெங்கடேசன் ஆகி யோர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்ற னர். இந்த நிலையில் தனி யார் நிலத்திற்கு செல்லும் சாலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ள தாக இவர்கள் மீது அரசு தரப்பில் வழக்கு தொடரப் பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த ஜனவரியில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆனால் இது நாள் வரை இரண்டு குடும்பத்தினர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து வெள்ளியன்று காலை மாநகராட்சி செயற்பொறியாளர் கலை வாணி தலைமையில் ஊழி யர்கள் வீடுகளை இடிக்க போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அப்போது இரண்டு குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் திடீரென்று தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதர வாக அதே பகுதியை சேர்ந்த வர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் அவர்க ளுடன் அப்பகுதி பொது மக்கள் ஆட்சியர் அலுவ லகத்திற்கு நேரில் சென்று தங்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதி காரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வரு கின்றோம். கூலித் தொழில் செய்து பிழைக்கும் எங்களை திடீரென்று காலி செய்து வெளியில் அனுப்பினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.