சிதம்பரம், பிப்.21- சிதம்பரம் நகராட்சி அலுவல கத்தில் நகரமன்ற கூட்டம் நடை பெற்றது. தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் முத்து குமரன், ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசுகையில்,“ நகரமன்ற பொறுப்பேற்று ஓராண்டாகிறது. இதுவரை ரூ.27 கோடியில் புதிதாக காய்கறி அங்காடி, பேருந்து நிலையம், நூலக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது”என்றார். தொடர்ந்து பேசிய அவர்,“ரூ.2 கோடியில் அறிவுசார் மையம், நவீன மின் மயானம், பூங்காக்கள் சீரமைக்கும் பணிகள் நடை பெறுகிறது. ரூ.143 கோடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 33 வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் சீரமைக்கப்படுகிறது. நகரம் முழுவதும் ரூ.3 கோடியில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட வுள்ளது. நகரிலுள்ள அனைத்து குளங்களும் தூர் வாரி கரைகள் சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நகராட்சி சார்பில் வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார். நகர மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் பேசுகையில்,“ நகராட்சி பகுதியில் குடியிருந்த 300-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு வீடுகள் என இடிக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மக்களுக்கு குடிநீர்தங்கு தடையின்றி வழங்க வேண்டும். மின் விளக்குகளை முறையாக பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நகர் மன்ற உறுப்பினர் தாரணி அசோக், “மாணவர்கள் பள்ளிக்கு வரும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடை கள் உள்ளது. கடந்த ஒரு வருட மாக இந்த இரண்டு கடைகளால் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, வேறு இடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும்”என்றார்.