districts

img

நெல்லிக்குப்பத்தில் சி.கோவிந்தராஜன் 14ஆம் ஆண்டு நினைவு தினம்

கடலூர், ஜன. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் சி.கோவிந்தராஜன் 14ஆம் ஆண்டு நினைவு தினம் கடலூரில் அனுசரிக்கப் ்பட்டது. நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரு டைய நினைவிடத்தில் ்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, சிஐடியு, மாதர் சங்கத்தின் சார்பில் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் எம்.ஜெயபாண்டியன், பகுதி குழு உறு ப்பினர் ஆர்.வி. சுப்பிரமணியம், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், தலைவர் டி.பழனிவேல், நிர்வாகிகள் வி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், எஸ்.தட்சிணாமூர்த்தி, வி.திருமுருகன், ஏ.பாபு, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீர முழக்கமிட்டனர். கடலூர் சிஐடியு மாவட்ட குழு அலுவலக வளாகத்திலும் சி.கோவிந்தராஜன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.