உதகை, ஏப்.8- உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 300க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் 120 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற் கிடையே கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு ரூ.2 கோடி செலவில் பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் சீர மைக்கப்பட்டது. குறிப்பாக, வளா கத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க இன்டர்லாக் கற்கள், மேற்கூரை அழகுபடுத்தப்பட்டு, நான்கு புறமும் கடிகாரங்கள் அமைக்கப்பட்டது. இதுதவிர உட்பகுதியில் பயணிகள் அமர இருக்கைகள் போடப்பட்டு, அந்த தளம் உயர்த்தப்பட்டது. மேலும், பெண்கள் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, போலீஸ் உதவி மையம், வெளி மாநில பேருந்து போக்குவரத்துக் கான முன்பதிவு மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனிடையே பயணிகள் காத்திருக்கும் பகுதிக்கு மேல் பொருத்தப்பட்ட மேற்கூரையில் ஆங்காங்கே பெயர்ந்து காணப் பட்டது. இந்த நிலையில் அந்த மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெயர்ந்த மேற்கூரை உள்பட அனைத்து மேற்கூரைகளையும் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும், கீழே பரவி கிடந்த மேற் கூரைகளை தொழிலாளர்கள் அப் புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறு கையில், உதகை மத்திய பேருந்து நிலையம் சீரமைக்கப் பட்டு ஒரிரு ஆண்டுகள் முடிவ டைவதற்குள் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமில்லாத மேற்கூரை அமைத்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் அரசின் பணம் வீணாகி உள்ளது. ஆகவே, இதன்பின்னராவது தரமான மேற்கூரை அமைக்க வேண்டும், என்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பெயர்ந்த மற்றும் அகற்றப்பட்ட மேற்கூரைக்கு பதிலாக புதிதாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.