districts

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் ஒன்றிய அரசுக்கு அமைச்சர் கா.ராமச்சந்தின் வலியுறுத்தல்

உதகை, செப்.16- பசுந்தேயிலைக்கு விலை நிர்ண யத்தை தமிழக அரசால் முடியாது. ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலை நிர் ணயம் செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் க.ராம சந்திரன் கூறினார்.  நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை விவ சாயம் உள்ளது.  தேயிலை விவசாயத் தில் 85 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகள் குடும்பங்கள் ஈடு பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டு களாக பசுந்தேயிலைக்கு  போதிய விலை கிடைக்காமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனை யடுத்து பசுந்தேயிலைக்கு உரிய  விலை நிர்ணயம் செய்ய வேண்டும்  என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத் தில் தேயிலை விவசாயிகள் வழக்கு  தொடர்ந்தனர். அதனை விசாரித்த  நீதிமன்றம் 2012 -ஆம் ஆண்டு உரிய  விலையை நிர்ணயம் செய்யுமாறு தேயிலை வாரியத்திற்கு உத்தர விட்டது.  ஆனால், அந்த உத்தரவை தென் னிந்திய தேயிலை வாரியம் இது வரை  அமல்படுத்தவில்லை. மேலும், தமிழக அரசு அமைத்த சாமிநாதன் கமிசன் பசுந்தேயிலை ஒரு கிலோ  உற்பத்தி செய்த ரூ.22.50 பைசா வையும் அதனுடன் 10 ரூபாய் கூடுத லாக சேர்த்து கிலோவிற்கு 32 ரூபாய் 50 பைசா வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு அந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கபடாமல் உள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலை யில் ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி 15ந்து நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, பொரங் காடு சீமை பகுதிகளை சேர்ந்த ஆயி ரக்கணக்கான தேயிலை விவசாயி கள்  பசுந்தேயிலையை பறிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதுடன் உண்ணாவிரத போராட் டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக சுற்றுலாத்  துறை அமச்சர் க. ராமசந்திரன் நஞ்ச  நாடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பேசிய அவர் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயத்தை ஒன்றிய அரசு  தான் செய்ய வேண்டும். மாநில  அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தத் தான் முடியும், அதனை தமிழக  முதல்வர் கடிதம் மூலம் தெரிவிப்பார்.  ஒன்றிய அரசு தேயிலை விவசாயி களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.