districts

img

உடுமலையில் செங்கொடி இயக்கத்தில் இணைந்த கிராம மக்கள்

உடுமலை, மார்ச்.1- மாமேதை லெனின் நினைவு நூற்றாண்டு,  கட்சி நிதி ஒப்படைப்பு, அரசியல் விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் என வியாழக்கிழமை உடு மலை வல்லக்குண்டாபுரம் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐம்பெ ரும் விழா நடைபெற்றது. இதில் வல்லக்குண் டாபுரம்  பகுதியை சேர்ந்த 94 பேர் செங்கொடி  இயக்கத்தில் இணைத்து கொண்டனர். வல்லகுண்டாபுரம் சூப்பையா நினை வுத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு வி.எஸ்.பரமசிவம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்  மு.வேலுச்சாமி  வர வேற்புரை ஆற்றினார்.

தியாகிகளின் செங் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர்  மதுக்கூர் ராமலிங்கம்  ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றனார். முன்னதாக தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  உடுமலை துரையரசன் மக்கள் கலைக்குழு வினரின் அரசியல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் வல்லக் குண்டாபுரம் கிராமத்திலிருந்து தங்களை செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்ட 94 பேருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் செந் துண்டு அணிவித்து வரவேற்றார்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியக்குழு சார்பில் கட்சி வளர்ச்சி  நிதியாக 3 லட்சத்து 4 ஆயிரம்  ரூபாய் வழங்கப் பட்டது.  இந்த பொது கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,  உடுமலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ், உடுமலை ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எ. பாலதண்டபாணி, எஸ்.ஜெகதீசன், எ.ராஜ கோபல், சு.தமிழ்த்தென்றல், கே.முருக வேல், த.அருண்பிரகாஷ்,  ஆ.ராமசாமி, எம். ரங்கராஜ்,  எஸ்.சித்ரா, கே.மகேஸ்வரி மற்றும்  கிளைச் செயலாளர்கள், பொது மக்கள்  உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.