உடுமலை, டிச.7- அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் சனியன்று நடை பெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலைப்பேட்டை கிளை சார்பில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு பயிற்சி வகுப்புகள் உடுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. மூன்றாவது வாரமாக நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புகளில் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை மாணவர் களுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் 60 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
மனத் திறன் கணிதம் மற்றும் ஏழாம் வகுப்பு இரண்டாம் பரு வத்திற்கான கணிதம் சார்ந்த பாடப்பகுதிகளை கிளுவன்காட் டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சந்திர சேகர் நடத்தினார். அவரைத் தொடர்ந்து வாளவாடி அறிவி யல் பட்டதாரி ஆசிரியர் கவிதா ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ அறிவியல் பாடங்களில், படிப்பறிவுத் திறன் சார்ந்த பயிற்சி அளித்தார். ப்ரொஜெக்டர் மூலம் வினாக்களுக்கான விடைகள் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பிற்கு 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பினை ஆசிரியர்கள் செல்லத் துரை, ஈஸ்வர சாமி, வேதநாயகி ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.