வணிகர்கள் உண்ணாவிரதம்
ஈரோடு, மார்ச் 1- உழவும், வணிகமும் நம் தேசத்தின் முதுகெலும்பு என வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் உணவு பொருட்களின் கொள்முதலை கார்ப்ப ரேட்டுகளிடம் ஒப்படைக்காதே என ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
பேரமைப்பின் தலைவர் இரா.க.சண்முகவேல் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பி னர் அ.கணேசமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கி.வெ.பொன்னையன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை - தொழிலாளர்கள் வேதனை
கோபி, மார்ச்.1- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள மேவாணியில் 2022-23 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம், வெள்ளியன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான குறை, நிறைகள் குறித்து தணிக்கைக் குழு மேற்கொண்ட ஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடை பெற்றுள்ளதா? என்பன குறித்து தணிக்கை குழுவினர் செய்த ஆய்வை, பொதுமக்களிடையே தெரிவித்தனர். அப்போது கிராமப்புற வேலை திட்டத் தில் பணி செய்பவர்களுக்கு, கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு வங்கிகளில் ஊதியம் செலுத்தவில்லை. இத னால் இத்திட்டத்தில் பணி செய்யும் முதியோர்கள் மருத்துவ செல வுக்கு கூட பணமின்றி தவித்து வருகின் றனர். எனவே நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு, ஒன்றிய அரசு உடனடி யாக ஊதியம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தேசிய அளவிலான திறனறித் தேர்வு
சேலம், மார்ச் 1- தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடமும், தருமபுரி மாவட்டம் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத் துள்ளன. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி யருக்கு ஒன்றிய அரசு மூலம் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு (என்எம்எம்எஸ்) வருடந்தோறும் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்.3 ஆம் தேதியன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவியர் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் நான்கு வருடங்களுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் நான்கு வருடங்களில் ரூ.48 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங் கப்படும். இந்த ஊக்கத்தொகை மாணவரது வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்நிலையில், இத்தேர்வு முடிவு புதனன்று மாலை இணையத்தில் வெளியா னது. அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 353 பேர் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்டம் முதலிடத்தையும், 339 பேர் தேர்ச்சி பெற்று தருமபுரி மாவட்டம் இரண்டாமிடத்தையும் பிடித்தன. திருநெல்வேலி 3 ஆம் இடத்தையும், தூத்துக்குடி 4 ஆம் இடத்தையும், விருது நகர் 5 ஆம் இடத்தையும் பிடித்தன.