ஈரோடு, ஏப்.8- பர்கூர் தாமரைகரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி யில் தாமரைகரை கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வியாழனன்று தாமரை கரை பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தக வல் கிடைத்ததும் பர்கூர் போலீசார், அந்தி யூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தாமரைகரை பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பொது குழாய் மூலம் எங்களுக்கு தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது. இதனை குடிப்பதற்கும், குளிப்பதற்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக எங்கள் பகுதிக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம், என்றனர். இதனை கேட்ட றிந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.