districts

பேரிடர் காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க 5 விரைவுக் குழுக்கள் அமைப்பு

ஈரோடு, நவ.28- கால்நடைகளுக்கு பேரிடர் காலத்தில் சிகிச்சை அளிக்க 5 விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராம ரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம், பருவ மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கால் நடைகளை பாதுகாக்க கால்நடை பரா மரிப்புத்துறை பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பேரிடர் காலங்களில் கால்நடைகளை பாது காக்கும் பொருட்டு 27 மருத்துவர்களை கொண்ட 5 விரைவு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.  மேலும், மழைக்காலங்களில் கால்ந டைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள, கால்நடை பராமரிப்புத்துறை அவசரகால தொடர்பு எண்களான 1962 மற்றும் 1800  255 880 ஆகிய எண்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ஆகவே, மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு கால்நடைகளை இயற்கை இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;