ஈரோடு, ஏப்.10- திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தக்கோரி அப்பகுதி விவசாயி கள் வனத்துறையினரை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். திம்பம் மலைப்பாதையில் செல் லும் வாகனங்களில் சிக்கி சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திலி ருந்து வெளியேறும் சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் அடிப்பட்டு உயிரிழப்பதால், இத னால் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிப்.10 ஆம் தேதியன்று திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக் கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயி கள் சங்கத்தினர் ரிட் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டபிறகு ஏப்.6 ஆம் தேதியன்று, 16.2 டன்னுக்கு குறைவாக உள்ள காய்கறி லாரிகள் செல்ல அனுமதி யளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உள் ளூர் மக்கள் சனிக்கிழமை இரவு முதல் காய்கறி வாகனங்களை இயக் குவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில், மாநில எல்லை யில் உள்ள காரப்பள்ளம் சோத னைச் சாவடியில், கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை அனு மதிக்க மாட்டோம் என்றும், மாலை 6 மணிக்கு மேல் மினி லாரிகள் செல்ல கூடாது என வனத்துறை மூலம் தாள வாடி மக்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிய டைந்த அப்பகுதி விவசாயிகள் காரப்பள்ளம் சோதனைச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச் சரகர் சிவக்குமார் மற்றும் தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, தாள வாடி வட்டாச்சியர் உமா மகேஷ் வரன் ஆகியோர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், உயர் நீதிமன்ற உத்தரவு படி 10 சக்கரம் வாகனம் மற்றும் 16.2 டன்னுள்ள வாகனத்துக்கு அனுமதி யளிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் முறையிட்ட னர். இதையடுத்து இரவு நேரத்தில் பிக்அப், மினி லாரி உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிப்ப தாக வனத்துறையினர் தெரிவித்த தையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.