ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் அதிமுக வேட்பா ளர் ஆற்றல் அசோக்குமார் வேட்பு மனு தாக்கலின் போது அளித்த பத்தி ரத்தில் தனது சொத்துமதிப்பு ரூ.582.95 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வர் அசோக்குமார். இவரது பெற்றோர் பேராசிரியர்கள். இவர்கள், தி இந்தி யன் பப்ளிக் பள்ளி குழுமம் போன்ற 60க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல் லூரிகளை இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் நடத்தி வருகின்றனர்.
இவர்கள், அரசியல் ஆர்வம் கார ணமாக அவரது தாயார் மற்றும் மாமி யாரின் (மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ) வழியில் பாஜகவில் தன்னை இணைத் துக் கொண்டார் அசோக்குமார். அதில் ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இதற்கு உதவி யாக இருக்கும் என ஆற்றல் என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங் கினார். பின்னர் அது அவரது பெய ரோடு அடைமொழியானது. இவை எல்லாம் அரசியல் கனவிற்குக் கைகொ டுக்கும் என்றிருந்தார். ஆனால், பாஜக முடிந்தவரையில் இவரிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வள வையும் கறந்தது. சளைக்காமல் செலவு செய்து வந்த அசோக்குமார். தமிழ்நாட்டில் பாஜக எடுபடாது என் பதை உணர்ந்து, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப் பட்டு அதிமுகவிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அசோக்குமார் திங்க ளன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு ரூ.526 கோடியே 53 லட் சத்து 9500 ரூபாய் அசையும் சொத்து கள் உள்ளன. இதில், வங்கி கணக்கு களில் ரூ.6.99 கோடி, 10.01 கிலோ நகை, கையிருப்பு ரூ.10 லட்சம் ஆகி யவை அடங்கும். இத்துடன் குடும்ப சொத்து மற்றும் தனது சுய சம்பாத் திய சொத்து என மொத்தம் ரூ 56.95 கோடி அசையா சொத்துகள் உள் ளன. மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளது. அதேநேரம், தனக்கு சொந்த வாகனம் இல்லை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இவரது மனைவி கரு ணாம்பிகா குமாருக்கு ரூ.47.38 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.22.60 கோடி அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.69.98 கோடி சொத்து கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், 10.60 கிலோ எடையுள்ள தங்க நகை மற்றும் கையிருப்பு ரூ.5 லட்ச மும் அடக்கம். இவரை எதிர்த்து போட் டியிடும் திமுக வேட்பாளர் கே.இ. பிராகாஷ் தனக்கு ரூ.4.89 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்திருத் துள்ளார்.