districts

ஈரோடு: 106 போக்சோ வழக்குகள்

ஈரோடு, ஜன. 1- ஈரோடு மாவட்டத்தில் மத, சாதி மற்றும் சட்டம் ஒழுங்கு  பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 106 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து  குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக ஈரோடு என காவல்துறை தெரிவித்துள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு மேற்கொள் ளப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட  காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு 34  கொலை வழக்குகள் பதிவானது. இதில் 10 வழக்குகள் குடும்ப தகராறு காரணமாக நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் 31  கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சம்பந்தப்பட்ட 63 குற்றவா ளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதாய கொலை வழக்குகள் 2 பதிவானது. இதில் ஓர் வழக்கு  கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற வழக்குகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.  மாவட்டத்தில் 62 கொடுங்குற்ற வழக்குகள் பதிவானது. இதில் 54 வழக்குகள் கண்டுபி டிக்கப்பட்டன. இதில் 138 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டனர்.

9 வாகனங்கள் மற்றும் 345 சவரன் நகைகள் உள்ளிட்ட ரூ.5 கோடியே 3 லட்சத்து 31 ஆயி ரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. இது களவு போன தில் 86 விழுக்காடு ஆகும். இதர 386 குற்ற வழக்குகளில் 282  வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வழக்குகளில் 58 வாக னங்கள், 134 சவரன் நகைகள் உட்பட ரூ.99 லட்சத்து 53 ஆயி ரம் மதிப்பிலான 54 விழுக்காடு சொத்துகள் மீட்கப்பட்டு உரிய வர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6419 நபர்கள்  மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 244 லாட்டரி வழக்குகளும், அதில் 311 நபர்களும், 196 கஞ்சா வழக்குகளும், அதில் 282 நபர்களும் அடங்குவர். இவர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.25 லட்சத்து 71 ஆயிரத்து 912  மதிப்புள்ள 187 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 891  மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 500 மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா சாக் லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிர தொடர் நடவ டிக்கையின் காரணமாக 50 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்  குட்கா பொருட்கள் கையாண்டதற்காக 503 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன. இதில் 525 நபர்கள் கைது செய்யப் பட்டனர். மொத்தம் 11 ஆயிரத்து 611 கிலோ குட்கா பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பேரின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 164 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 830 நபர்கள் கைது செய் யப்பட்டு ரூ.66ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அரசு மதுபானங்கள், வெளிமாநில மதுபானங்கள், கள்ளச் சாராய பதுக்கல், கடத்தல், விற்பனை செய்தவர்கள் மீது 4 ஆயிரத்து 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 433 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களி டமிருந்து 43ஆயிரத்து 731 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதில் 3ஆயிரத்து 535 லிட்டர் மதுபானம் உரிய முறை யில் அழிக்கப்பட்டது். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 140 இருசக்கர மற்றும் 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமு தல் செய்யப்பட்டன. அவற்றில் 48 ஏலம் விடப்பட்டு  

ரூ.8லட்சத்து 92 ஆயிரத்து 123 அரசுக்கு செலுத்தப்பட் டுள்ளது.  கனிம வளம் மற்றும் மணல் திருட் தொடர்பாக 23 வழக் குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 33 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டு 39 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்களை தடுக்கும் பொருட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் 1394 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத் தப்பட்டன. இதன் விளைவாக புகார் தெரிவிக்க வருவோ ரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும் 51 குழந்தை திரு மணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 106 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்து குற்றவாளிகளும் நீதிமன்ற  காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3 குற்றவா ளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 184 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. இணையதள மற்றும்  சைபர் குற்றங்கள் தொடர்பாக 2ஆயிரத்து 484 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஏமாற்றப்பட்ட ரு.65லட்சத்து 30 ஆயி ரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. 76 லட்சத்து 72 ஆயிரத்து 796 கைப்பே சிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.  2023ஆம் ஆண்டில் 3ஆயிரத்து 725 பொதுமக்கள் குறைதீர்  மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.