districts

img

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூன் 15-  டாஸ்மாக்கில் முறை கேடான பணியிட மாறுதல்  உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கம் சார்பில் இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட தலைவர் அய்  யாத்துரை தலைமை வகித்  தார். மாவட்டச் செயலாளர் சிவாஜி, டாஸ்மாக் ஊழியர்  சங்க மாநில பொதுச்செயலா ளர் கே.திருச்செல்வன் ஆகி யோர் பேசினர். டாஸ்மாக் ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நம்பு, செயலாளர் தனுஷ்கோடி, பொருளாளர் பால்ராஜ், சிவகங்கை மாவட்ட செய லாளர் முருகன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சந்தா னம், பால்ராஜ், வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.