இராமநாதபுரம்,மார்ச் 2- சந்தை வியாபாரிகள் சங்க கூட்டம் முது குளத்தூா் தாலுகா அலுவலகத்தில் பரமக் குடி துணை ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது. இந்த பேச்சு வாா்த்தையில் சந்தை வியா பாரிகள் சங்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள் ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.சிஐடியு சாா்பில் .மாவட்ட.தலைவா்.. சந்தா னம், மாவட்டச் செயலாளா்.எம்.சிவாஜி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளா். இரா.முத்துவிஜயன்.சந்தை வியாபாரிகள். சங்கத் தலைவா் எம்.ராமு, செயலாளா். அண்ணாதுரை.பொருளாளா்.ஆலடிஸ்வரன்.ஆா்.சண்முக,பெருமாள் மற்றும் முதுகுளத்துா்.தாலுகா தாசில்தாா்.பேரூராட்சி . செயல்அலுவலா்கள். முது குளத்தூர் சாயல்குடி. அபிராமம்.கமுதி மற்றும்.காவல் துறை.கண்கானிப்பாளர் கள். உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண் டனர். பேச்சுவாா்த்தையில் . கீழ்க்கண்ட முடி வுகள் எடுக்கப்பட்டன .நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டும் குத்தகைதாரர்கள் வியாபாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும். அதற்கு ரசீது வழங்க வேண் டும். குத்தகைதாரர்கள் வசூல் செய்யும் போது புகைப்பட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அதிகமான தொகை வியாபாரிகளிடம் வசூல் செய் யப்பட்டால் அது தொடர்பான புகார் காவல்துறையிடம் அளித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். வாரச்சந்தை குத்த கைதாரர் கட்டண விவரங்களை விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் குத்தகை உரிமையாளர்களின் ஏஜெண்டுகள் மற்றும் உதவியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர் முத்துவிஜயன் தெரிவித்துள்ளார்.