இராமநாதபுரம், மார்ச் 6- தமிழ்நாடு சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று இராமேஸ்வரத்தில் ஆர்.முத்துவிஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.தெய்வராஜ், சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், உழைப்பாளி மக்க ளுக்கு விரோதமாகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது என்றும், தமிழகத்தில் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த வேண்டும், சாலையோர வியாபாரி களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தையில், நிர்ணயிக்கப்பட்ட குத்தகையை குத்தகைதாரர்கள் வசூல் செய்வதை மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், இராமேஸ் வரம் அரிச்சல் முனை பகுதியில் வியா பாரம் செய்து வந்த வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனு மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.