districts

img

புதுமைப்பெண் திட்டத்தில் இராமநாதபுரத்தில் 763 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கல்

இராமநாதபுரம், பிப்.19- கல்வி அனைவருக்கும் பொதுவான தாக இருக்க வேண்டும், அனைவ ருக்கும் சமமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்ற அடிப்படையிலும், மக ளிர் தனது சொந்த காலில் நிற்க வேண்  டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்  டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத் தப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் தொடங்கப்பட்ட அற்புதமான திட்டம் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் அவர்களது பெயரால் தொடங் கப்பட்ட புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்  பள்ளி மாணவிகள் கல்லூரிக்கு செல்லா மல் இடைநிற்றல் ஆகக்கூடாது என்ப தற்கான ஓர் உன்னதமான திட்டத்தி னைத் துவக்கி வைத்தார். இந்த திட்  டத்தின் மூலம் 6ஆம் வகுப்பில் படிக் கக்கூடியவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து  முடித்து, வசதி இல்லாத காரணத்தி னால் கல்லூரிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாதந்தோறும்  ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகின்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மாணவிகளால் இணையதள சேவை மூலம் பதிவு செய்யப்பட்டதை இரண்டாம் கட்டத்  தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்க ளின் மூலம் பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இத்திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 08.02. 2023 அன்று துவக்கி வைத்தார். இத்  திட்டத்தின் கீழ் சுமார் 1003 மாணவி யர்கள் விண்ணப்பித்ததில் 763 தகுதி யான மாணவிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் வங்கிக்  கணக்கு பற்று அட்டைகள் வழங்கப்  பட்டன. இதன் மூலம் முதலாம் ஆண்டு  பயிலும் கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் மற்றும் வேளாண்மை ஆகிய உயர்கல்விகளில் சேர்ந்து பயிலும் முத லாம் ஆண்டு மாணவியர் தமது உயர்  கல்வியை சிறந்த முறையில் படித்து  பெற்றோரின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும்  கல்லுரி மாணவி தெரிவிக்கை யில், என்னுடைய பெயர் மு.ரையானா பர்வீன். எனது தந்தை திரு.முஹமது இன்சாதுல்லாஹ் கான் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். நான் இராமநாதபுரம் செய்  யது அம்மாள் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறேன். எனது  குடும்பத்தில் எனது தந்தை மட்டுமே  வேலைக்குச்சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். எனது தந்தையின்  வருமானம் வீட்டு செலவுகளுக்கு சரி யாக உள்ளதால் என்னுடைய கல்லூரி  படிப்பிற்கான தேவைகளை பூர்த்தி  செய்வது மிகவும் சிரமமாக இருந்து  வந்தது. தற்போது முதலமைச்சர் தொடங்கி வைத்த  மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டத்தினால் எனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் டைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நான் எனது  படிப்பிற்கு உதவக்கூடிய உபகர ணங்களை என்னுடைய தந்தையை  சிரமப்படுத்தாமல் வாங்கிக்கொள்கி றேன். இந்த முத்தான திட்டத்தை வழங்கிய  முதலமைச்சருக்கு அவர்  களுக்கு என் சார்பிலும் என் குடும்பத்  தின் சார்பிலும் என் நெஞ்சார்ந்த  நன்றியினை தெரிவித்துக்கொள்கி றேன் என்று கூறினார். இத்தகவலை இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  நா. விஜயகுமார் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்தித்தொகுப்பில் தெரி வித்துள்ளனர்.