அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு சமுதாய நல மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் உலக மலேரியா தினம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியர் பயிற்சி கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்டது. பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மீன்சுருட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். விக்ரமன் நர்சிங் கல்லூரி முதல்வர் சுருதி, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.