districts

img

உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை ஜெயங்கொண்டம் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரியலூர், மார்ச் 21 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள் 134, கொசு ஒழிப்பு பணியாளர்கள் 44,  நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 20 என 198  பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய 40  பணியாளர்களுக்கு எந்தவிதமான உத்தர வும் இல்லாமல் தேவைக்கேற்ப பணி வாங்கிக் கொண்டு தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டால், ‘தருகிறேன் தருகிறேன்’ என காலதாமதம் செய்து, ‘வேற எந்த நகராட்சி களும் பணம் கொடுக்கவில்லை; அதனால் உங்களுக்கும் பணம் கொடுக்க முடியாது’ என நகராட்சி ஆணையர் கூறுகிறார். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான ஊதி யத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரி திங்களன்று காலை துப்புரவு பணிக்கு செல்லாமல் அனைத்து பணியாளர்களும் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண் டம் போலீசார் மற்றும் நகர்மன்றத் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ‘பணிக்கு  செல்லுங்கள் நகராட்சி ஆணையர் வந்தவு டன் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.