அரியலூர், ஏப்.7- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே முத்துச்சேர்வாமடம் ஊராட்சிக்குட்பட்ட கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் பாண்டியன் எனும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கட்டுப்பட்ட இடத்தில் 50 குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்ற னர். ஏரிக்கும் குடியிருக்கும் இடத்திற்கும் சம்பந்தம் இல்லாத இடமாக இருப்பதால் இவர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி அவர்களை அப்புறப்படுத்த அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிட கோரி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அதிகாரிகளுக்கு கண்ட னம் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண் டம் காந்தி பூங்காவில் இருந்து பேரணி யாக சென்று தாசில்தார் அலுவலகம் வாயில் முன்பாக நின்று குடியிருப்பு பகுதி களை அகற்றக் கூடாது, குடியிருப்ப வர்களுக்கே குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட் டம் செய்தனர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் மீனாவிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்ப தாகவும், இது சம்பந்தமாக 7-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் நாட்டார்கள் ஜெயபால் தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர்கள் தங்கசாமி, பாலையா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங் கோவன் மாவட்ட செயற்குழு மகாரா ஜன் அம்பிகா, மாதர் சங்க மாவட்ட செய லாளர் பதமாவதி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஒன்றிய தலைவர் ரமேஷ், விசிக ஒன்றிய பொருளாளர் கந்தப்பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் கொளஞ்சி, ஊராட்சி உறுப்பினர் பபிதா, திருஞானம், செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோவிந்த ராஜ், ரவி, விதொச ஒன்றிய செயலாளர் தங்கராசு, ஆர்.ரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.