districts

img

மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ஸ்ரீராமன் ஊராட்சியில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூ.34.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.