அரியலூர், ஏப்.10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி அவரு டைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் வாகனத்தில் புகைப்படக் கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். இக்கண்காட்சி தமிழகம் முழு வதும் உள்ள ஒவ்வொரு மாவட் டங்களிலும் காட்சிப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் தொட ர்ச்சியாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி மணி துவக்கி வைத்து, வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். புகைப்படக் கண்காட்சி அரி யலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 8 மற் றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில், உடையார் பாளையம் மாவட்ட கல்வி அலு வலர் ஜோதிமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.