districts

நெல் தரிசு பயறு வகை சாகுபடி முனைப்பு இயக்கம்

அரியலூர், மார்ச் 1 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரம் இறவாங்குடி கிராமத்தில் வேளாண்மை  துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நெல்  தரிசு பயறு வகை சாகுபடி குறித்த சிறப்பு  முனைப்பு இயக்கம் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச் சாமி தலைமை நடைபெற்றது.  இதில் பழனிச் சாமி சிறப்புரையாற்றுகையில், நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார். வேளாண் திட்டங்களின் பயனாளிகளுக்கு இடு பொருட் களை வழங்கினார். வேளாண்மை அலுவலர்  மகேந்திரவர்மன், வேளாண்மை உதவி அலுவலர்கள் கவிதாராம்குமார் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்  சகாதேவன், இறவாங்குடி கிராம ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பாலமுருகன் மற்றும்  விவசாயிகள் கலந்து கொண்டனர்.