அரியலூர், அக்.15 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள உடையார்பா ளையத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் - அன்பு ரோஜா தம்பதி. இவர்களின் மகள் சர்வானிகா தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற்ற, ஏழு வயது சிறுவருக்கான சதுரங்க போட்டியில் 11 சுற்றுகளில் விளையாடி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று, இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். வெற்றி பெற்ற சர்வானிகாவுக்கு உடையார்பாளையம் பொதுமக்கள் மற்றும் அரசுப் பள்ளி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சர்வானிகாவின் தாய் கூறுகையில், “உடையார்பாளையம் கைகல நாட்டார் தெருவில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கின்ற னர். இவர்களுக்கு அரியலூரில் உள்ள பயிற்சியாளர்கள் மூலம் சதுரங்கப் பயிற்சி அளித்து வந்தோம். பின்னர் ஆன்-லைன் மூலம், மதுரையில் உள்ள பயிற்சிக்கூடத்தை தொடர்பு கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். எனது கணவர் நெசவாளர். அவ ரது மாத வருமானம் ரூ.10 ஆயிரம். இதை வைத்துதான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். இதில்தான், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்தல் மற்றும் போட்டி களுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு, யாராவது ஒருவரின் உதவியை பெற்று, அதன் மூலம் சென்று வந்து கொண்டிருக்கிறோம். தற்போது, போட்டிகளுக்கு செல்ல சர்வானிகாவும் மட்டும் சலுகை வழங் கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவியாக தானும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், போதிய பொருளாதார வசதி இல்லாததால், குழந்தையுடன் நான் செல்வது கேள்விக்குறியாக உள்ளது. எனவே அரசு எங்களுக்கு தகுந்த சலுகைகளை வழங்கினால், தேசிய அளவிலான போட்டிகளில் எனது மகள் பங்கேற்க உதவியாக இருக்கும்” என்றார்.