பாபநாசம், ஜன.22 - அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் நடுத் திட்டில் கீழராமநல்லூர், மேலராமநல்லூர் உள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வர்களின் பிரதான தொழில் விவசாயம். கொள்ளிடம் ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் தீவு போல் சுமார் 5 கி.மீட்டர் பரப்பள விலுள்ள ராமநல்லூரில், புரா தன கோயில்கள் இருக் கின்றன. இந்த ஊரைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூ ரிக்கும், விவசாயிகள் சாகு படி செய்த விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யவும், பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வும் தஞ்சாவூர் மாவட்டத் திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீவு போன்று உள்ள ராமநல்லூ ருக்கு பாலம் அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த னர். அப்போதைய அரசு, ரூ.48 கோடி நிதி ஒதுக்கி, அரியலூர் மாவட்டத்தி லிருந்து ராமநல்லூருக்கு 2016 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தது. பல்வேறு பணிகளுக் காக இங்குள்ள மக்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து செல்வதால், தஞ்சா வூர் மாவட்டத்தையும், ராம நல்லூரையும் இணைக்கும் வகையில் பாலம் அமைத்து தர வேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து கோ ரிக்கை விடுத்தனர். இதனால், கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் துரைக் கண்ணு தலைமையில் நடை பெற்றது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள் ளாததால், கிராம மக்கள் பாலம் கட்டக் கோரி மீண்டும் மனு அளித்து வரு கின்றனர். இவர்களின் மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா?