அரியலூர், பிப்.2 - வேளாண் பெருமக்களின் நலனுக்காக தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறை யினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக குறைந்த வாட கைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வீட்டிலி ருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கரு விகளை வீட்டிலிருந்தே இ-வாடகை ஆன்லைன் செயலியை உழவன் செயலி வழியாக அணுகி ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்பதை தேர்வு செய்து முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம். மண் தள்ளும் இயந்திரத்திற்கு குறைந்தது 8 மணி நேரமும், அதிகபட்சமாக 30 மணி நேரமும், டிராக்டர், மினி டிராக்டர் மற்றும் மண் அள்ளுவாரி இயந்திரத்திற்கு (JCB) குறைந்தது 2 மணி நேர மும், அதிகபட்சமாக 20 மணி நேரமும், நெல் அறு வடை இயந்திரத்திற்கு குறைந்தது 1 மணி நேரமும், அதிகபட்சமாக 20 மணி நேரமும் முன்பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். பணத்தை UPI நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும் முன் பதிவு செய்து வேளாண் இயந்திரங்களின் விவ ரத்தையும் அறியலாம்.
விவசாயிகள் இயந்திர வாடகையினை, வாடகைக்கு தேவைப்படும் குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவும், அதிகபட்சமாக 15 நாளுக்குள்ளும் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் முன்பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்படாத வாடகை தொகையினை பற்றி சம்பந்தப்பட்ட உபகோட்ட அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கு மிகுந்த பயன்தரக் கூடிய வேளாண் இயந்திரங்களான மண் தள்ளும் இயந்திரங்கள்-2, டிராக்டர்-9, மண் அள்ளுவாரி இயந்திரங்கள் (JCB) - 2, நெல் அறுவடை இயந்தி ரங்கள் - 2 ஆகியவை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. டிராக்டரால் இயக்கக் கூடிய வைக்கோல் களைத்திடும் கருவி-2, டிராக்டர் ட்ரெய்லர் - 1, வைக்கோல் கட்டும் கருவி – 2, நிலக்கடலை செடி பிடுங்கும் கருவி -2, 9 கொத்து கலப்பைகள், 11 கொத்துக் கலப்பை மற்றும் பல உபகரணங்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவ சாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.
டிராக்டரால் இயக்கக் கூடிய அனைத்து கருவி களுக்கும் டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு குறைந்த வாடகையாக ரூ.400, மண் தள்ளும் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.970, மண் அள்ளுவாரி இயந்திரத்திற்கு 1 மணிநேரத்திற்கு ரூ.760, நெல் அறுவடை இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.1630 வீதத்தில் குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவ ரங்களைப் பெற்றிட ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆன்டிமடம், செந்துறை பகுதிகளை சார்ந்த விவ சாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண் மைப் பொறியியல் துறை வெள்ளைப் பிள்ளை யார் கோவில் தெரு பரணம் ரோடு, உடையார்பா ளையம் மற்றும் அரியலூர், திருமானூர் பகுதி களை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறி யாளர் வேளாண்மைப் பொறியியல் துறை அறை எண்.26, பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் மெயின் ரோடு அரியலூர் அலுவலகங்களை அணுகுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.