அரியலூர், மார்ச் 29- ஜூன் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மலேசியாவில் சர்வ தேச மாற்றுத்திற னாளிக்கான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் நடை பெறுகின்றன. போட் டிக்கான அணியில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், மேம் படுத்தும் விதமாகவும் இந்திய அணிக்கும், மலேசியா அணிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. இதில், இந்திய அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவாவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சார்ந்த லட்சுமணன் காந்தன், அரியலூர் மாவட்டம் உதயநத்தத்தைச் சார்ந்த கார்த்திக் ஆகிய வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் தலைமை பயிற்சியாளராக இராமநாதபுரத்தை சேர்ந்த அப்பாஸ் அலி யும், மேலாளராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரிச்சந்திரனும் தொடர்வார்கள் என்று மாற்றுத்திறனாளி களுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் (DCCBI) அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கார்த்திக்கிற்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.