districts

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அரியலூர், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தை சேர்ந்த செல்வமணி உள்ளிட்ட சிலர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகரா றில், சாமிநாதன் மற்றும் அவரது நண்பர் கள் சேர்ந்து செல்வமணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்தனர்.  இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய சாமிநாதன், சொந்த கிரா மத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கி யிருந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் உள்ள  ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு தனது  தங்கையின் திருமணத்திற்காக கடந்த செப்டம் பர் 7 ஆம் தேதி சாமிநாதன் வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வமணியின் தம்பி இளைய ராஜா உள்ளிட்ட சிலர், கூலிப்படையை வைத்து, திருமண மண்டபத்தில் இருந்து அருகிலுள்ள ஹோட்டலில் டீ சாப்பிட வந்த சாமிநாதனை வெட்டிப் படுகொலை செய்த னர். இக்கொலை குறித்து போலீசார் வழக்கு  பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளி களை தேடி வந்தனர்.  இந்நிலையில், இதில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் திருநறையூர் கிராமத்தை  சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார்கோ வில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார் ஆகி யோர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திருவையாறு நீதிமன்றத்தில் சரண டைந்தனர்.  மேலும் போலீசாரின் தொடர் விசாரணை யில் இக்கொலையின் முக்கிய குற்றவாளி யான இளையராஜாவின் மனைவி ரெஜினா,  செல்வகுமார், செல்வம், நவீன்குமார் ஆகி யோரை கைது செய்து விசாரணை செய்தனர்.  அப்போது சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது மற்றும் சாமி நாதன் யார் என அவரை அடையாளம் காட்டி யது போன்ற குற்றங்களில் இவர்கள் ஈடு பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இக் கொலையின் முக்கிய குற்றவாளியான இளையராஜாவை போலீசார் தேடி வந்த நிலையில், தா.பழூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளையராஜா போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்தார். இதை கண்ட போலீ சார் அவரை விரைந்து சென்று கைது செய்த னர். கைது செய்யப்பட்ட இளையராஜா குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.