districts

img

ஆளுநரே வெளியேறுக! அரியலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அரியலூர். ஜன.20 - ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும், தொடர்ச்சியாக அரசியலுக்கு புறம்பாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.