அரியலூர், மார்ச் 9 - கும்பகோணம் - சேலம் புதிய வழித்தடத் தில் ஜெயங்கொண்டம் - அரியலூர் - பெரம் பலூர் - ஆத்தூர் வழியாக சேலத்திற்கு, ஜெயங் கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் இயக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராமநாதன், கிளை மேலா ளர் ராம்குமார், ஜெயங்கொண் டம் தாசில்தார் ஆனந்தன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி மற்றும் போக்குவரத்து கழக பணியா ளர்கள் கலந்து கொண்டனர். புதிதாக இயக்கப்பட்ட பேருந்து காலையில் 6 மணிக்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்று, கும்பகோணத்தில் 7.10, ஜெயங் கொண்டத்தில் 8.15, அரியலூரில் 9.15, பெரம்பலூரில் 10.15 என இறுதியாக 2 மணிக்கு சேலத்திற்கு சென்ற டையும். மீண்டும் சேலத்தில் 2.57-க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு ஜெயங்கொண் டத்தை வந்தடையும். எம்எல்ஏ கண்ணன், ஜெயங்கொண்டம் புதிய பேருந்து பேருந்து நிலையத்தை சுற்றி பேருந்தை இயக்கினார்.