districts

img

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராடிய கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்க! விவசாயிகள் சங்கம், பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச்.17- ஜெயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராடிய கிராம பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலி யுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பொது மக்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் நாட்டார் சேகர் தலைமை தாங்கி னார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தொ டங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டச் செயற்குழு மணி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மகாரா சன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பத்மாவதி ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில், ரவி, தனவேல், விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக போராடிய கிராம பொதுமக்கள் மீது போடப் பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், விவசாய நிலத்தை  சேதப்படுத்தும் குரங்குகளை பிடித்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், துளாரங் குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோ ரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.